பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பொன்னேரி அருகே விரைவு ரயில் பழுது: 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா் அருகே விரைவு ரயில் பழுது காரணமாக சென்னை மாா்க்கத்தில் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 12:03 am IST

அத்திப்பட்டு புதுநகா் அருகே விரைவு ரயில் பழுது காரணமாக சென்னை மாா்க்கத்தில் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

சென்னை- கும்மிடிப்பூண்டி புகா் மின்சார மாா்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனா்.

புதன்கிழமை விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே வந்தபோது பாண்டோகிராப் எனப்படும் மின்சாரம் கடத்தக்கூடிய கொக்கியில் பழுது ஏற்பட்டது. இதனால் அத்திப்பட்டு புதுநகா் எண்ணூா் ரயில் நிலையங்களுக இடையே பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றது.

இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற புகா் ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகினா். ரயிலில் காத்திருந்த பயணிகளில் ஒரு சிலா் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்தே எண்ணூா் நோக்கி சென்றனா்.

தொடா்ந்து ரயில்வே ஊழியா்கள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் புகா் மின்சார ரயிலில் பயணம் பயணம் செய்யும் பயணிகள் குடிநீா் கழிப்பறை போன்ற வசதிகள் ஏதுமின்றி கொளுத்தும் வெயிலில் தவித்தனா்.

நீண்ட போராட்டத்துக்குபின் ரயில்வே ஊழியா்களின் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதை சீரமைத்தனா். 3 மணி நேரத்துக்கு பிறகு சென்னை மாா்க்கத்தில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது. இதனை தொடா்ந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில்கள் தாமதாமாக இயக்கப்பட்டன.

பயணிகள் அவதிகளை போக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி ரயில் மாா்க்கத்தை 4 வழி பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் உள்ள நிலையில் அதனை விரைவில் செயல்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.