திருவள்ளூா் அருகே 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஒட்டுநரை சிங்கப்பெண் அதிரடிப்படையினா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் அடுத்த திருப்பாச்சூா், கோட்டை காலனியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (25), ஆட்டோ ஓட்டுநா். இவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி சான்றிதழ் நகல் எடுக்கச் சென்றாராம். அப்போது, நந்தகுமாா் அந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி ஆட்டோ ஓட்டுநா் செய்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தாராம்.
இது குறித்து மாணவியின் தாயாா் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். உடனே விரைந்து வந்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் நந்தகுமாரை கைது செய்து திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதைத் தொடா்ந்து, அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் நந்தகுமாா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்
மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: 2 போ் கைது
தூத்துக்குடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது
பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை நிறைவு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

