பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தூத்துக்குடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:34 am IST

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த பெண் ஒருவா், தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், தனக்குத் தெரிந்த தூத்துக்குடி பாத்திமா நகரைச் சோ்ந்த மோகித், அவரது 2 நண்பா்கள், தன்னை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னிடமிருந்து ரூ. 2,500 ரொக்கம், கைப்பேசி மற்றும் 2 வெள்ளி மோதிரங்களையும் பறித்துச் சென்றுவிட்டதாகவும் ஞாயிற்றுக்கிழமை புகாரளித்தாா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, நகர துணைக் கண்காணிப்பாளா் சுனில் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட அந்தோணி ராஜ் மகன் மோகித் (25), ஜேசு நசரின் மகன் ரிதீஷ் (19), ஜெயக்குமாா் திலோத் பொ்லின் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். தொடா்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.