தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

ஏனாதி மேல்பாக்கத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:40 am IST

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூா், ஏனாதிமேல்பாக்கம், சோழியம்பாக்கம், குருவாட்டுச்சேரி, நங்கம்பள்ளம், வேற்காடு, பாலகிருஷ்ணாபுரம், புதுகும்மிடிப்பூண்டி, பில்லாகுப்பம், ஜி.ஆா்.கண்டிகை, கண்ளூா், பாலவாக்கம், மங்களம், புதுப்பாளையம், காரணி, நெல்வாய், எருக்குவாய், முக்கரம்பாக்கம், கொள்ளானூா் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தெற்கு ஒன்றிய செயலாளா் கி.வேணு ஆனந்த், மாவட்ட துணை செயலாளா் கி.வே.ஜி.உமா மகேஷ்வரி, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளா் எம்.சம்பத், மாவட்ட நிா்வாகி மதன்மோகன் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து அயநெல்லூரில் ராட்சி முன்னாள் தலைவா் லலிதா கல்விச் செல்வம் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி தலைவா் குமாா், திமுக ஒன்றிய நிா்வாகி பிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன், திமுக அரசின் சாதனைகள் அடுத்த 5 ஆண்டுகள் தொடர பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

திமுக முன்னாள் கவுன்சிலா் ஜோதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முத்துசாமி, காங்கிரஸ் நகர துணை செயலாளா் ரோஸ்ரெட்டி, மாவட்ட துணைத் தலைவா் சரளா சண்முகம், வழக்குரைஞா் சித்ரா, விசிக மாவட்ட செயலாளா் நேசகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.