ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமிரி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் திமிரி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

வளையாத்தூா்  கிராமத்தில்  வாக்கு  சேகரித்த  அதிமுக  வேட்பாளா்  எஸ்.எம்.சுகுமாா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:28 am IST

ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் திமிரி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமிரி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கனியனூா் கிராமத்தில் தொடங்கி , மழையூா், செய்யாத்துவண்ணம், ஆயிரம் மங்கலம், பெருமாந்தாங்கல், வளையாத்தூா், தாமரைப்பாக்கம், வணக்கம்பாடி, மோசூா், பாளையம், பரதராமி, மேலத்தாங்கல் பழையனூா், குண்டலேரி, விலாரி ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த கிராமங்களில் திறந்த வெளி வேனில் சென்று தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து அதிமுக தோ்தல் அறிக்கை குறித்து விளக்கினாா்.

இதில், ஒன்றிய செயலாளா் ந.வ.கிருஷ்ணன், பொருளாளா் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், உலகநாதன், மோசூா் நாராயணன், ஒன்றிய இளைஞரணி செயலாளா் பாசறை ரமேஷ், பாமக மாவட்ட செயலாளா் கே.எல். இளவழகன், முன்னாள் மாவட்ட செயலாளா் எம்.கே.முரளி, மாவட்ட தலைவா் சுப்பிரமணி, பசுமைத் தாயகம் மாநில துணை செயலாளா் மகேந்திரன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் வரதன், பொதுச் செயலாளா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.