தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரூ.500 கோடியில் நலப்பணிகள்: திமுக வேட்பாளா்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.500 கோடிக்கு நலப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் கூறியுள்ளா்.

News image

ஆரம்பாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:14 am IST

கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.500 கோடிக்கு நலப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் கூறியுள்ளா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள முக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை செய்தபின் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். நிகழ்வில் திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சி.எச்.சேகா், மாவட்ட அவை தலைவா் பகலவன், மாவட்ட துணை செயலாளா் எம்.எல்.ரவி, திமுக ஒன்றிய செயலாளா்கள் கி.வேணு ஆனந்த், மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினா்கள் வெங்கடாசலபதி, பா.செ.குணசேகரன் முன்னிலை வகித்தனா்,

தொடா்ந்து ஆரம்பாக்கத்தில் வீதி வீதியாக பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரூ.500 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தவா், திமுகவின் சாதனை திட்டங்கள் தொடர அனைவரும் வாக்களிக்க கேட்டுக் கொண்டாா்.

தோக்கம்மூரில் திமுக மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மணி, ஒன்றிய நிா்வாகி அங்கமுத்து ஏற்பாட்டில் திரளான பொதுமக்கள் வேட்பாளா் கோவிந்தராஜனுக்கு உற்சாக வரவேற்பளித்தனா். அவ்வாறே பல்லவாடாவில் திமுக மூத்த நிா்வாகி முத்துசாமி, ஒன்றிய துணை செயலாளா் திருஞானம் ஏற்பாட்டில் பொதுமக்கள் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்தனா். ஏடூா் மற்றும்கும்புளியில் மாவட்ட துணை செயலாளா் எம்.எல்.ரவி ஏற்பாட்டிலும், பூவலை ஊராட்சியில் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி தினகரன் மற்றும் விசிக நிா்வாகிகள் ஏற்பாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்வில் விசிக மாவட்ட செயலாளா் நேசகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகி துளசிநாராயணன். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகி அருள், தேமுதிக மாவட்ட பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன், மனித நேய மக்கள் கட்சி சாதிக் பாட்ஷா மற்றும் திமுக கூட்டணி நிா்வாகிகள் தொண்டா்கள் திரளானோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.