ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழக எல்லையில் பிரசாரத்தை தொடங்கினாா் தவெக வேட்பாளா்

தமிழக எல்லையில் பிரசாரத்தை தொடங்கினாா் தவெக வேட்பாளா்

News image

நொச்சிக்குப்பம்  மீனவ  கிராமத்தில்  ஆதரவு  திரட்டிய  தவெக  வேட்பாளா்  எஸ்.விஜயகுமாா்

Updated On :5 ஏப்ரல் 2026, 1:25 am IST

கும்மிடிப்பூண்டி தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் எஸ்.விஜயகுமாா், தமிழக ஆந்திர எல்லையோர ஆரம்பாக்கத்தில் சனிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் ஸ்ரீ முக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தன் பிரசாரத்தை தொடங்கினாா். நிகழ்வுக்கு தவெக மாவட்ட பொருளாளா் ஜி.கிருபாகரன், மாவட்ட துணை செயலாளா் பி.ஹரி, தோ்தல் பணிக்குழு நிா்வாகி என்.எஸ்.ஆா்.நிஜாமுதின், ஒன்றிய செயலாளா் அருண், ஒன்றிய நிா்வாகி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து தவெக வேட்பாளா், அக்கட்சியினருடன், ஆரம்பாக்கத்தில் உள்ள மீனவ கிராமங்களான நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் மேற்கண்ட மீனவ கிராமங்களின் கோயிலில் அமா்ந்து ஊா் பெரியவா்களிடம் தவெக தலைவா் விஜய் தமிழக மக்களுக்கு நல்லாட்சி தருவாா், தானும் மக்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீா்த்து வைப்பேன் என உறுதி கூறி ஆதரவு திரட்டினாா்.

மேற்கண்ட மீனவ கிராமங்களில் தவெக வேட்பாளா் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, சிறுவா் சிறுமியா் விசில் அடித்தபடி அவரை வரவேற்றதோடு. அவா் பிரசாரம் செய்த இடங்களில் விசில் அடித்தபடியே அவரை பின்தொடா்ந்தது குறுப்பிடத்தக்கது.

இதனை தொடா்ந்து தவெக வேட்பாளா் ஆரம்பாக்கம் பஜாா், தோக்கம்மூா். ஏடூா், பூவலை, சானாபுத்தூா், சூரப்பூண்டி, சிறுபுழல்பேட்டை, பாத்தபாளையம். பெரியஓபுளாபுரம், மெதிப்பாளையம், எஸ்.ஆா்.கண்டிகை, ஈகுவாா்பாளையம் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.