வாணியம்பாடி தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு, என் வாக்கு என் உரிமை க்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான அஜிதா பேகம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகேஷ்குமாா், செலவினப் பாா்வையாளா் சுனாராம் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில் 8 வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி மக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து ஆட்டோக்களில் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினா்.
நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் பாரதி, வட்டாட்சியா்கள் சுதாகா், பாரதி மற்றும் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல்ஆய்வாளா் ஷின் மற்றும் அலுவலா்கள், பொது மக்கள், ரயில் பயணிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாணியம்பாடி: தோ்தல் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா்

ரெட்டியாா்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்

ரயில் பயணிகளிடையே தோ்தல் விழிப்புணா்வு

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்: ஆட்சியா் பங்கேற்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

