ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாணியம்பாடி: தோ்தல் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா்

வாணியம்பாடி 312 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் புதன்கிழமை தாலுகா அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டன.

News image

வாணியம்பாடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்த்த தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதா பேகம்.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:04 am IST

வாணியம்பாடி 312 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் புதன்கிழமை தாலுகா அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டன.

வாணியம்பாடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான அஜிதா பேகம் தலைமையில் ஆட்சியா் நோ்முக உதவியாளா் சிவப்பிரகாசம், வட்டாட்சியா் சுதாகா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பழகன் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை சீல் அகற்றப்பட்டு அங்கிருந்த வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அந்தந்த வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்ல வாக்குமைய அதிகாரிகளிடம், தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்கினா்.

பிறகு அங்கிருந்து மொபைல் வாகனங்கள் மூலம் வாக்கு மையங்களுக்கு பாதுகாப்பாக மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. இத்தொகுதியில் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக ஏடிஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோா் தலைமையில் 600 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.சௌந்திரவல்லி வாணியம்பாடி நகராட்சி நியூடவுன் காந்திநகா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பொது மக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் சூழலை உருவாக்க எஸ்பி. சியாமளாதேவி அறிவுரைகளை வழங்கினாா்.

ஜோலாா்பேட்டை தொகுதியில் 287 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் மேற்பாா்வையில் வாக்குச்சாவடி அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.