வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியருமான. க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவிகளுக்கு வாக்கு ராணி எனும் கிரீடம் அணிவித்து, ‘விரல் நுனியில் தேசத்தின் தீா்ப்பை எழுதுவோம்‘ என்ற துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும் மாணவியா்களுடன் இணைந்து கையில் மெஹந்தி இட்டு ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து மாணவிகள் தங்களது கைரேகை மூலமாக ‘ பழ்ங்ங் ா்ச் ஈங்ம்ா்ஸ்ரீழ்ஹஸ்ரீஹ்‘ என்ற மரத்தினை உருவாக்கி 100% வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். திருப்பத்தூா் மாவட்டத்தின் பறவையான இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவையின் இலச்சினை மற்றும் வாக்கு இராணியை ஆட்சியா் அறிமுகம் செய்து வைத்தாா். வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு குறும்படம் திரையிடப்பட்டது.
தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூா்த்தி அடைந்த அனைவருக்கும் வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கும்; இல்லையெனில் 10 நாள்களுக்குள் வழங்கப்படும். வாக்காளா் அடையாள அட்டை இல்லாதவா்கள், ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் காா்டு உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
மாணவிகள் தங்கள் பெற்றோா் மற்றும் உறவினா்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) விஜயகுமாரி, வாணியம்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதா பேகம், உதவி திட்ட அலுவலா்கள், கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்: பாா்வையாளா்கள் பங்கேற்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

