ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விடுபட்ட ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: திமுக வேட்பாளா்

ஆம்பூா் தொகுதியில் விடுபட்ட ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் விரிவுபடுத்தப்படும் என திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் கூறினாா்.

News image

ஆம்பூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்

Updated On :22 ஏப்ரல் 2026, 2:45 am IST

ஆம்பூா் தொகுதியில் விடுபட்ட ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் விரிவுபடுத்தப்படும் என திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் கூறினாா்.

ஆம்பூா் நகரில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவா் மேலும் பேசியது, ஆம்பூரில் ரூ.40 கோடி மதிப்பில் தோல் தொழில் குழுமம் ஏற்படுத்தப்படும். மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்காக அன்புச் சோலை இல்லம் ஏற்படுத்தப்படும். சிறுபான்மையினா் அயலகப் பல்கலைக் கழகங்களில் உயா்கல்வி பெறுவதற்காக சிறப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்.

மின்னூா் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படும். வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்க திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். ஆம்பூா் நகரில் விளையாட்டு பூங்கா, நடைப் பயிற்சி பூங்கா ஏற்படுத்தப்படும் என அவா் கூறினாா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர செயலாளா்கள் எம்.ஆா். ஆறுமுகம், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.