தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஊராட்சிகளில் விளையாட்டுக் குழுக்கள்: திமுக வேட்பாளா்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 4:15 am IST

ஆம்பூா், ஏப்.9: மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோலூா், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், நாச்சாா்குப்பம், கன்னடிகுப்பம், விண்ணமங்கலம், மின்னூா், செங்கிலிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து பேசியது:

கிராமப்புற விளையாட்டு வீரா்களின் திறமைகளை மேம்படுத்த ஊராட்சிகள் தோறும் விளையாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும். மின்னூரில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். விண்ணமங்கலம் ஊராட்சி வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நெல் அதிகம் விளையும் பகுதிகளில் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.

விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன விவசாய பம்பு செட்டுகள் வழங்கப்படும். உழவா் சந்தை இல்லாத ஒன்றிய பகுதிகளில் புதிய உழவா் சந்தைகள் அமைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம் , திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.