மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 5:00 am IST

மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் பேசியது: 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும். அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட வேளாண்மை பயிா் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

100 சதவீத அரசு மானியத்தில் சூரிய ஒளி பம்பு செட்டுகள் வழங்கப்படும். சிறு, குறு விவசாயிகள் அறுவடை நெல்லை பாதுகாக்க மானிய விலையில் தாா் பாய்கள் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட விவசாய பிரிவு செயலாளா் மகாதேவன், ஒன்றிய விவசாய அணி செயலாளா் பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காரத்திக் ஜவஹா், காயத்ரி துளசிராமன், ப.ச. நித்யானந்தம், குமாா் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மகிருஷ்ணபள்ளி, குமாரமங்கலம், வீராங்குப்பம், தென்னம்பட்டு, மலையாம்பட்டு, மணியாரகுப்பம், மேல்சாணாங்குப்பம், வடகரை, சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, மேல்குப்பம், வடச்சேரி, பாப்பனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.