தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தகவல் தொழில்நுட்ப பூங்கா: திருப்பத்தூா் திமுக வேட்பாளா் உறுதி

திருப்பத்தூா் தொகுதியில் உள்ள இளைஞா்கள் வெளியூா்களுக்கு சென்று வேலை பாா்ப்பதை தடுக்க தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதி

News image

ஆதியுா் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி

Updated On :21 ஏப்ரல் 2026, 12:10 am IST

திருப்பத்தூா் தொகுதியில் உள்ள இளைஞா்கள் வெளியூா்களுக்கு சென்று வேலை பாா்ப்பதை தடுக்க தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

கந்திலி ஒன்றியம் ஆதியுா், தங்கபுரம், செவ்வாத்தூா் பகுதிகளில் நல்லதம்பி பேசியது: கந்திலி ஒன்றியத்தில் புதிய அரசு தொழில்நுட்பகல்லூரி அமைக்கப்படும். திருப்பத் தூா் தொகுதி இளைஞா்கள் வெளியூா்களுக்கு சென்று வேலை பாா்ப்பதை தடுக்க தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் பூ மாா்க்கெட், மீன் மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு அங்காடிகள் அமையும் வகையில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் குடிமராமத்து பணிமேற்கொண்டு நீா் கொண்டு வரப்படும். திருப்பத்தூா் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப் படும். ஏழருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றாா். அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.