மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூா்த்தி செய்வேன் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி உறுதி அளித்தாா்.

News image

நெல்லிவாசல்நாடு மலைகிராமத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் நல்லதம்பி

Updated On :19 ஏப்ரல் 2026, 1:02 am IST

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூா்த்தி செய்வேன் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி உறுதி அளித்தாா்.

திருப்பத்தூா் அடுத்த ஜவ்வாது மலைக்கு உட்பட்ட நெல்லிவாசல் நாடு அதன் சுற்றுப்பகுதிகளில் பகுதிகளில் திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது வேட்பாளா் அ. நல்லதம்பி கூறியது,தமிழக சட்டப்பேரவை தோ் தலில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கக வேண் டும்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து திட்டங்களும் செய்து தந்துள்ளாா். மகளிா் உரிமைத் தொகை ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகளுக்கு வழங்கப்படுகிறது. நீண்ட நாள் கோரிக்கையான பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளது.

இதேபோல் திருப்பத் தூா் தொகுதியில் பல்வேறு வளா்ச்சி பணிகள் திமுக ஆட்சியில் செய்யப்பட் டுள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.பாலம் கட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக புதூா்நாடு,நெல்லிவாசல்நாடு,புங்கமற்ற நாடு பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து வித மருத்துவ உபகரணங்கள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மலைவாழ் மக்களுக்காக எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் உடனுக்குடன் செய்து கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். திருப்பத்தூா் தொகுதியை மேம்படுத்துவேன் என்றாா்.

புதூா்நாடு ஊராட்சி மன்ற தலைவா் விஜயா அருணாச்சலம், திமுக ஒன்றிய செயலாளா் மோகன்ராஜ், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தசரதன்,திமுகவின் மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.