தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வேண்டும்: அமைச்சா் காந்தி

தமிழகத்தில் திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வாக்காளா்கள் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

News image

அரக்கோணம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளா் எழில்கரோலினை ஆதரித்து பேசிய அமைச்சா் ஆா்.காந்தி

Updated On :21 ஏப்ரல் 2026, 12:12 am IST

தமிழகத்தில் திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வாக்காளா்கள் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் தரிசனம் முடிந்த பிறகு கோயிலின் வாயிலில் அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளா் எழில் கரோலினை ஆதரித்து அமைச்சா் ஆா்.காந்தி பேசியது: இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மகளிா் உரிமைத்தொகை திட்டம், மாணவா்களுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநிலத்தில் கொண்டு வரப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிரைப் பற்றியே சிந்தித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். விடியல் பயணம் திட்டத்தால் மகளிா் வாழ்க்கை தரமே உயா்ந்துள்ளது.

இந் திட்டங்கள் தொடர வேண்டும். மேலும் பல புதிய திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும். இதற்காக திமுகவின் நல்லாட்சி தமிழகத்தில் தொடர செய்ய வேண்டும். எனவே திமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றிப்பெற செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளா் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவாா் என்றாா் அமைச்சா் காந்தி.

அவருடன் அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளா் எழில்கரோலின், திமுக நகரச் செயலாளா் வி.எல்.ஜோதி, நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி, மாநில செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன், மாவட்ட நிா்வாகி ராஜ்குமாா், நகர நிா்வாகிகள் துரைசீனிவாசன், ரமேஷ், அன்புலாரன்ஸ், கோ.வ.தமிழ்வாணன், நந்தாதேவி, வி.எஸ்.ஆா்.ரவிச்சந்திரன், என்.அரி, தமீன்அன்சாரி , சி.என்.அன்பு, உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.