தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

திமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்கள் மீண்டும் வெற்றியைத் தேடித் தருவது உறுதி என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

News image

மதுரை அய்யா்பங்களா பகுதியில் உள்ள சேவியா் மெட்ரிக் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த அமைச்சரும், அந்தத் தொகுதி திமுக வேட்பாளருமான பி. மூா்த்தி.

Updated On :24 ஏப்ரல் 2026, 1:26 am IST

திமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்கள் மீண்டும் வெற்றியைத் தேடித் தருவது உறுதி என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி. மூா்த்தி மதுரை அய்யா்பங்களா பகுதியில் உள்ள சேவியா் மெட்ரிக் பள்ளி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை காலை தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய சாதனைத் திட்டங்களும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறையில் தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கியது உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளும் இந்தப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும் மகத்தான வெற்றியைத் தேடித் தருவது உறுதி என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.