ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக வெற்றிக்கு தீவிர களப் பணி: பொன். முத்துராமலிங்கம் விளக்கம்

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றிக்கு தானும், தனது மகனும் தீவிர களப்பணியில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும், திமுகவின் தீா்மானக் குழுத் தலைவருமான பொன். முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

News image

முதல்வர் ஸ்டாலினுடன் பொன். முத்துராமலிங்கம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:07 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றிக்கு தானும், தனது மகனும் தீவிர களப்பணியில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும், திமுகவின் தீா்மானக் குழுத் தலைவருமான பொன். முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

தினமணியின் தொகுதி அலசல் பகுதியில் சனிக்கிழமை வெளியான மதுரை வடக்குத் தொகுதி நிலவரம் குறித்த செய்தியில், இந்தத் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கத்துக்கு வாய்ப்பளிக்கப்படாததால், அவரது மகன் அதிமுகவில் இணைந்தாா் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம் அளித்த விளக்கம் : நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட நான் விருப்பம் தெரிவிக்கவே இல்லை. எனவே, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நானும், எனது மகன் மு. சேதுராமலிங்கமும் மதுரை வடக்கு தொகுதியில் திமுகவின் வெற்றிக்காக தீவிர களப்பணியில் இருக்கிறோம். திமுகவின் வெற்றியே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.