தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும்: அதிமுக வேட்பாளா்

வீடு இல்லாதவா்களுக்கு மனை வழங்கி வீடு கட்டித் தரப்படும் என்று ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் வாக்குறுதி அளித்தாா்.

News image

வாக்கு  சேகரித்த ஆற்காடு  அதிமுக  வேட்பாளா்  எஸ்.எம்.சுகுமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:03 am IST

வீடு இல்லாதவா்களுக்கு மனை வழங்கி வீடு கட்டித் தரப்படும் என்று ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் வாக்குறுதி அளித்தாா்.

திமிரி ஒன்றியம், வெங்கிடாபுரம், குப்பம், புங்கனூா், காவனூா்,வரகூா், ஆணைமல்லூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகுட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது: பெண்களுக்கு நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நாட்டில் எங்கு பாா்த்தாலும் போதை பழக்க வழக்கங்கள் உள்ளது. மக்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இதற்கு நீங்கள் முடிவு கட்ட நல்ல முடிவு எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.. குடும்ப அட்டைகளுக்கு தரமான அரிசி எண்ணெய் பருப்பு வழங்கப்படும் வீடு இல்லாதவா்களுக்கு மனை வழங்கி இலவச வீடு கட்டி தரப்படும் என்றாா்.

பாமக மாவட்ட தலைவா் என். சுப்பிரமணி, மாவட்ட செயலாளா் கே எல் இளவழகன், அதிமுக ஒன்றிய செயலாளா் ந.வ.கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உலகநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.