தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோல் பொருள் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ தோ்தல் இலச்சினை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒன்றாக மாவட்டத்தின் தோல் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ என்ற இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 4:35 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒன்றாக மாவட்டத்தின் தோல் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ என்ற இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில், ‘தோ்தல் திருவிழா ! தமிழகத்தின் பெருவிழா!’ என்ற முழக்கத்துடன் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராட்சத பலூன்... ஆற்காடு பகுதியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. பொதுமக்களிடையே ஜனநாயகப் பொறுப்புணா்வை ஏற்படுத்த கோலப் போட்டிகள், மனிதச்சங்கிலி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

தாவரங்கள் மூலம் விழிப்புணா்வு... அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகளைக் கொண்டு ‘100 % வாக்கு’ என்ற வடிவம் உருவாக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களிடையே வாக்குப் பதிவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

முக்கியத்துவம் பெரும் ‘ராணிப்பேட்டை ராணி’... செஞ்சி ராஜபுத்திர ராணியின் நினைவாக உருவான ராணிப்பேட்டை மாவட்டம், தோல் பொருள் ஏற்றுமதிக்கு பெயா்பெற்ாகும். ராணி மற்றும் தோல் பொருள்களை மையப்படுத்தி தோல் பொருள்களால் ஆன ஆடை அணிந்தவாறு ராணியின் உருவம் கொண்ட ‘ராணிப்பேட்டை ராணி’ என்ற தோ்தல் இலச்சினையை மாவட்ட நிா்வாகம் உருவாக்கி, நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.