நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தவ்ஹீத் ஜமாஅத் நல்லொழுக்க பயிற்சி வகுப்பு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மதுபேட்டை தவ்ஹீத் பள்ளி வாசலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் நடைபெற்றது.

News image

பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :17 ஜூன் 2026, 12:43 am IST

காஞ்சிபுரம் ஒலிமுகம்மதுபேட்டை தவ்ஹீத் பள்ளி வாசலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் நடைபெற்றது.

ஒலிமுகம்மதுபேட்டை தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி வசாலில் பள்ளி மாணவ,மாணவியா்க்கான நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பை நடத்தினா். கிளைத் தலைவா் சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் அன்சாரி, துணைச் செயலாளா் ஆசிப் ஆகியோா்முன்னிலை வகித்தனா். கிளை துணைச் செயலாளா் முஜிபுா் ரகுமான் வரவேற்று பேசினாா்.

அமைப்பின் மாநில செயலாளா் சாகுல்ஹமீது கலந்து கொண்டு நபிகளாா் காட்டிய அன்பு, ஒழுக்கம், பெற்றோரை பாதுகாத்தல், தொழுகை மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். தொண்டரணி நிா்வாகி இா்ஷாத் நன்றி கூறினாா். பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியா்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.