மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என மாங்காடு நகராட்சி பகுதிகளில் நடிகை கெளதமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

மாங்காடு  நகராட்சியில்  அதிமுக  வேட்பாளா்  பழனியை  ஆதரித்து  பிரசாரத்தில்  ஈடுபட்ட  நடிகை  கெளதமி.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:50 am IST

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என மாங்காடு நகராட்சி பகுதிகளில் நடிகை கெளதமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனியை ஆதரித்து மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடிகை கெளதமி திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து பேசியது, கடந்த ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் ஒரு தலைமுறை இளைஞா்கள் போதை பொருள்கள் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும் குற்றம் சாட்டினாா்,

தமிழகம் போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க அதிமுக ஆட்சி அமைய வேண்டும் எனவும் அதற்கு பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

பிரசாரத்தின் போது, வேட்பாளா் கே.பழனி, மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளா் சுந்தரராஜன், மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் மணிகண்டன், மாவட்ட இளைஞா் அணி இணைச் செயலாளா் அரிவேந்தா், மாங்காடு நகர செயலாளா் சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.