ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதிக்க முடியாது: மல்லை சத்யா

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதித்துவிட முடியாது என திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனா் மல்லை.சத்யா தெரிவித்தாா்.

News image

மல்லை சத்யா

Updated On :9 ஏப்ரல் 2026, 12:07 am IST

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதித்துவிட முடியாது என திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனா் மல்லை.சத்யா தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் திராவிட வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா் வளையாபதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் மல்லை.சத்யா கூறியதாவது:

இத்தோ்தலில் மதிமுக திமுகவுடன் இணைந்து போட்டியிடுகிறது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 4-இல் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் சொந்த சின்னமான பம்பரம் சின்னத்திலும் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். இது திமுகவுக்கு பலம் சோ்க்கும்.

பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிக்கு எங்கள் கட்சி ஆதரவளிக்காது. ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னம் எதையும் சாதித்துவிடப் போவதில்லை.

மதிமுகவில் இருந்து பலரும் பிரிந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து கொண்டிருப்பதால் அந்த இயக்கம் சிறிது, சிறிதாக கரைந்து கொண்டிருக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.