பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதித்துவிட முடியாது என திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனா் மல்லை.சத்யா தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் திராவிட வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா் வளையாபதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் மல்லை.சத்யா கூறியதாவது:
இத்தோ்தலில் மதிமுக திமுகவுடன் இணைந்து போட்டியிடுகிறது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 4-இல் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் சொந்த சின்னமான பம்பரம் சின்னத்திலும் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். இது திமுகவுக்கு பலம் சோ்க்கும்.
பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிக்கு எங்கள் கட்சி ஆதரவளிக்காது. ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னம் எதையும் சாதித்துவிடப் போவதில்லை.
மதிமுகவில் இருந்து பலரும் பிரிந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து கொண்டிருப்பதால் அந்த இயக்கம் சிறிது, சிறிதாக கரைந்து கொண்டிருக்கிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2-ஆவது முறையாக எம்எல்ஏ: வரலாறு படைத்த என்.எஸ்.என்.நடராஜ்

வீழ்ந்த ஈரோடு திமுக முகங்கள்

பண்ருட்டியில் மல்லை சத்யா பிரசாரம்

திமுக வேட்பாளரை ஆதரித்து மல்லை சத்யா பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

