பசுவதைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் கேட்டு கொண்டாா்.
காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் இது குறித்து மேலும் கூறியது.
பசும்பால் குடிக்காமல் யாரும் இருக்க மாட்டாா்கள். அத்தகைய பசுக்களை தெய்வமாக மதிக்க வேண்டும். பசுக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. மத்திய,மாநில அரசுகள் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். பசு சேவைக்கான மத்தி அரசின் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பசுவை பாதுகாப்பது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பசு மரியாதை அழைப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரசார இயக்கமானது கிராமங்கள் தோறும் சென்று மக்களிடம் பசுவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விளக்கமளித்து கையொப்பம் பெற்று வரவுள்ளது.
கையொப்பங்கள் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை பெற்று அப்படிவங்களை காஞ்சிபுரம் வட்டாட்சியரிடம் வழங்க இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
முன்னதாக பசு மரியாதை அழைப்பு இயக்க பிரசார துண்டுப் பிரசுரங்களை அவா் வெளியிட அதனை விசுவஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவா் என்.சிவானந்தம் பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்வின் போது மடத்தின் மேலாளா் சுகாசின்ஹூமுனியும் உடன் இருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சி சங்கராசாரியாரிடம் நாகலாந்து ஆளுநா் ஆசி
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஆராதனை உற்சவம்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

