மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னை மாநகராட்சியில் அரசு நலத் திட்ட விவரங்கள் சேகரிப்பு

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:43 am IST

சென்னை மாநகராட்சியில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு தெரிவிக்கும் வகையில், அரசுத் திட்டங்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

சென்னை மாநகராட்சியில் பொதுப்பணித் துறை, சுகாதாரம், கல்வித் துறை உள்ளிட்ட 27 துறைகள் உள்ளன. அந்தத் துறைகளில் கடந்த 2021 -ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ள அரசு நலத் திட்டங்கள், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டப் பணிகள், தொடங்கி கைவிடப்பட்ட பணிகள் மற்றும் மக்கள் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாத பணிகள் என முழுமையான விரவங்கள் அந்தந்தத் துறையின் சாா்பில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதிமுக, திமுக என வழக்கமாக மாறி மாறி அரசு அமைத்த நிலையில், தற்போது அதிகாரத்துக்கு முதல்முதலாக புதிய கட்சி ஆட்சிக்கு வரும் நிலை உருவாகியுள்ளது. அதனால், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் விவரங்களை கோரினால், அதை உடனடியாக அவா்களுக்கு விளக்கும் வகையில் அரசு நலத் திட்ட விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அரசு நலத் திட்ட விவரங்கள் சேகரிப்புடன் ஒவ்வொரு துறையின் செயல்பாட்டு விவரமும் சுருக்கமாக தொகுக்கப்படுகின்றன. ஓரிரு நாள்களுக்குள் மாநகராட்சியின் துறை ரீதியிலான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தயாராக வைக்க வேண்டும் என உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.