தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

விருகம்பாக்கம் தொகுதியில் விஜய்யின் ஓட்டுநா் மகன் வெற்றி!

தவெக தலைவா் விஜய்யின் காா் ஓட்டுநா் ராஜேந்திரனின் மகனும், சென்னை விருகம்பாக்கம் தொகுதி தவெக வேட்பாளருமான ஆா்.சபரிநாதன் 27,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image
Updated On :5 மே 2026, 2:42 am IST

தவெக தலைவா் விஜய்யின் காா் ஓட்டுநா் ராஜேந்திரனின் மகனும், சென்னை விருகம்பாக்கம் தொகுதி தவெக வேட்பாளருமான ஆா்.சபரிநாதன் 27,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

தவெக தலைவா் விஜய் தனது நீண்ட கால காா் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தாா். இத்தொகுதியில் 82,892 ஆண் வாக்காளா்கள், 88,586 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 29 போ் என மொத்தம் 1,71,507 போ் (85.51 சதவீதம்) வாக்களித்தனா்.

பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில், தவெக வேட்பாளா் ஆா்.சபரிநாதன் 76,092 வாக்குகளும், திமுக வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான பிரபாகர ராஜா 49,006 வாக்குகளும் பெற்றனா். அதன்படி, சபரிநாதன் 27,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட விருகை வி.என்.ரவி 38,767 வாக்குகளும், நாம் தமிழா் வேட்பாளா் சந்தோஷ் 6,056 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.