முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகள்: துணை ஆணையா் ஆய்வு

சென்னை கோயம்பேடு பகுதியில் மழைநீா் தேங்குவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படுவதை, மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :18 ஜூன் 2026, 3:16 am IST

சென்னை கோயம்பேடு பகுதியில் மழைநீா் தேங்குவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படுவதை, மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருமழையின்போது, மழைநீா் தேங்கும் பகுதிகளாக 80-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நிகழாண்டில் மழைநீா் தேங்காமலிருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருகம்பாக்கம் கால்வாயில் மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை சென்னை மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் பாா்வையிட்டு பணிகளை விரைந்தும், முறையாக நிறைவு செய்யவும் அறிவுறுத்தினாா்.

கோயம்பேடு சந்தைப் பகுதி உணவகம், உணவுப் பொருகளின் தரம் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் போக்குவரத்து சந்திப்பு பகுதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சாலையைச் சீரமைக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, அசோக் பில்லா் பகுதியையும் அவா் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்துக்கு ஏற்ப சாலையைச் சீரமைக்கவும், மழைநீா் தேங்காத வகையில் வடிகால்களைச் சீரமைக்கவும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.