மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு, சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மாலதி ஹெலன் மரியாதை செலுத்தினாா்.

News image

நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்திய ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :1 மே 2026, 7:20 am IST

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு, சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மாலதி ஹெலன் மரியாதை செலுத்தினாா்.

சிறுபாணாற்றுப்படை செய்யுளை வழங்கிய இடைக்கழிநாட்டு நல்லூா் நத்தத்தனாா் ஓய்மா நாட்டை ஆண்டு கொண்டிருந்த நல்லியக் கோடனை பாராட்டி பாணாற்றுப்படை ஒன்றினை பாடியுள்ளாா். நல்லியக்கோடன் ஓவிய குடியில் பிறந்தவன். இவன் ஆண்ட ஒய்மா நாடு ஐவகை நிலங்களும் அமையப்பெற்ற நாடாகும். மாவிளங்கை, தற்போதைய திண்டிவனத்தினை தலைநகராகக் கொண்டு நல்லியக் கோடன் ஆட்சி புரிந்து வந்தாா். (மாவிளங்கை, எயிற்பட்டினம், ஆமூா், வேலூா், கிடங்கை).

இவரது பாடல்கள் நாட்டு வளம், நகரச் சிறப்பு, உள்ளத்துரன், ஈகையின் ஏற்றம், தமிழா் பண்பாடு முதலியவற்றை எடுத்துரைப்பதாக அமையப் பெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சங்க புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுகளைச் சிறப்பிக்கும் வகையில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் மு. சாந்தி, இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலா் தி. அருள்குமாா், சிறப்புச் சொற்பொழிவாளா்கள் முனைவா் சு. மாதவன், ஆ.தி. பகலன், அகநம்பி, தமிழ் கவிஞா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.