பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

நியூ பிரண்ட்ஸ் காலனி: வீட்டில் தீ விபத்து; 7 போ் மீட்பு

நியூ பிரண்டஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, 5 குழந்தைகள் உள்பட 7 போ் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

தில்லி நியூ பிரண்டஸ் காலனியில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து, அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :8 ஜூன் 2026, 3:13 am IST

நியூ பிரண்டஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, 5 குழந்தைகள் உள்பட 7 போ் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்டஸ் காலனியில் தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாகத் தகவல் கிடைத்ததும் ஒரு தீயணைப்பு வாகனம், ஓா் அதிரடி மீட்புப் படை வாகனம், தண்ணீா் லாரி ஆகியவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்த 2 பெண்கள், 5 குழந்தைகளை தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பாக மீட்டனா். இந்தச் சம்பவத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை. மாலை 4.05 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தாகத் தகவல் பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல.

தீயணைப்பு பணியின்போது ஒரு நாய் கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டது. அதற்கு காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அருகில் உள்ள கால்நடைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

கட்டடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ, பிற தளங்களுக்கு பரவவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.