ஆத்தூா் அருணகிரிநாதா் தெருவில் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ஆத்தூா் அருணகிரிநாதா் தெருவில் வசிக்கும் ஜெகநாதன்- சரஸ்வதி தம்பதி வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த போது அவா்களது ஓட்டு வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ச. அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் மின்சாரம் தடைசெய்யப்பட்டது.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. ஆத்தூா் நகா்மன்ற துணைத் தலைவா் கவிதா ஸ்ரீராம் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளா்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நியூ பிரண்ட்ஸ் காலனி: வீட்டில் தீ விபத்து; 7 போ் மீட்பு

புன்செய்புளியம்பட்டியில் பலத்த காற்றுடன் மழை: ஏராளமான வாழைகள் சேதம்

பண்ருட்டியில் கூரை வீட்டில் தீ விபத்து: மின்சாதன பொருள்கள் எரிந்து சேதம்

வீட்டில் குளிா்சாதனப் பெட்டி வெடித்து பொருள்கள் சேதம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

