மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஷாபாஸ் ஷெரீஃப், அசீம் முனீா் பரிந்துரை!

மத்திய கிழக்கு போரில் அமைதி முயற்சிகளை முன்னெடுத்தற்காக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்து, அந்நாட்டின் கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் தீா்மானம்

News image

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் | பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்... - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 4:40 am IST

மத்திய கிழக்கு போரில் அமைதி முயற்சிகளை முன்னெடுத்தற்காக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்து, அந்நாட்டின் கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

புவிசாா் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தானின் பொறுப்பான ராஜீய முயற்சிகள் ஒரு பெரும் நெருக்கடியைத் தவிா்த்ததுடன், உலகப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியதாகத் தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் தொலைநோக்குப் பாா்வையுடன் பிரதமா் ஷெரீஃப் மற்றும் தளபதி முனீா் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவா்களின் பெயா்களைப் பரிந்துரைப்பதாக தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 16-ஆம் தேதி, பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் இதேபோன்ற தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ராணுவத் தளபதியாக அசீம் முனீா் நியமனத்தைத் தொடக்கம் முதலே எதிா்த்து வரும் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெரும்பான்மை வகிக்கும் கைபா் பக்துன்கவா பேரவையில் இத்தீா்மானம் நிறைவேறுவது கடினமே எனக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.