மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டால் வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

News image

ஹோர்முஸ் நீரிணை - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 4:55 pm IST

ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டால் வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் 21 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது, ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. அதில், இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் வெளியிட்ட அறிக்கையில், “ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடற்பகுதியின் பாதுகாப்பு என்பது அனைவருக்குமானது அல்லது யாருக்கும் உரிமையில்லாதது என இஸ்லாமியக் குடியரசான ஈரானின் ஆயுதப் படைகள் தெளிவாகவும் உறுதியாகவும் அறிவிக்கின்றது.

ஈரான் எல்லைக்குள்பட்ட நீர்ப்பரப்பில் ஆயுதப் படைகளின் உறுதியான பாதுகாப்பு தொடரும். மேலும் பலமுறை எச்சரித்ததன்படி, எதிரி தரப்பு கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை. எப்போதும் இருக்கப் போவதில்லை.

மற்ற கப்பல்கள் ஈரான் ஆயுதப் படைகளின் விதிமுறைகளுக்கு உள்பட்டு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

போர் முடிந்த பின்னரும் ஈரானின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக அமெரிக்கா நடந்துகொள்வதால், ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை ஈரான் உறுதியாகச் செயல்படுத்தும்.

சர்வதேச கடல் பகுதியில் கப்பல்களின் நடமாட்டத்திற்கு குற்றவாளி நாடான அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானது. அது கடற்கொள்ளைக்குச் சமமானது.

ஹோர்முஸ் நீரிணை பிரச்னையில் ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டால், வளைகுடா நாடுகளில் உள்ள துறைமுகங்களில் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

Summary

Iran has warned that if the United States blockades Iranian ports

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.