ஜெர்மனியின் மிருகக்காட்சி சாலையில் உள்ள உலகின் மிக வயதான கொரில்லா தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடியது.
மேற்கு ஆப்ரிக்க பகுதியைச் சேர்ந்த ‘ஃபட்டூ’ என்ற பெயர் கொண்ட பெண் கொரில்லா கடந்த 1959 ஆம் ஆண்டு ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. கொரில்லா அங்கு வந்தபோது அதற்கு 2 வயது இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கொரில்லாவின் உண்மையான பிறந்த தேதி தெரியாத நிலையில் ஏப்ரல் 13 அதன் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக கொரில்லா குரங்குகள் காடுகளில் 35 முதல் 40 ஆண்டுகள் உயிர்வாழும். வளரும் சூழ்நிலையைப் பொறுத்து அது மாறுபடும்.
பெர்லின் மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளில் 1955 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த ’இங்கோ’ என்ற 75 வயதான ஃபிளமிங்கோ பறவை இறந்த பின்னர், அதற்கு அடுத்த மூத்த விலங்காக ‘ஃபட்டூ’ கொரில்லா இருந்து வருகிறது.

ஃபட்டூ என்கிற 69 வயதான கொரில்லா - AP
மேற்கு ஆப்ரிக்காவின் காட்டில் ஃபட்டூ பிறந்ததாக நம்பப்படுகிறது. ஃபதூவை பிரெஞ்சு மாலுமி ஒருவர் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வந்து, பிரான்சின் மார்சே நகரில் உள்ள மதுபானக் கடையில் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் அதை பண்டமாற்று செய்ததாக கின்னஸ் உலக சாதனை புத்தகம் குறிப்பிடுகின்றது. அதன் பின்னர் ஒரு பிரெஞ்சு விலங்கு வியாபாரி ஃபதூவை மிருகக்காட்சிசாலைக்கு விற்றுள்ளார்.
வயதானதால், ஃபட்டூ தனக்கென இருக்கும் வசிப்பிடத்தில் மட்டுமே பெரும்பாலும் இருக்கின்றது. மேலும், முதுமைக் காலத்தில் மற்ற கொரில்லாக்களிடமிருந்து விலகியிருக்கவும் விரும்புகின்றது. பற்களை இழந்த ஃபட்டூ, லேசான மூட்டுவலி மற்றும் காது கேளாமை நோயினால் அவதிப்படுகிறது. சற்று பிடிவாத குணமுடன் இருந்தாலும் அங்குள்ள பணியாளர்களுடன் ஃபதூ மிகவும் நட்புடன் நட்புடன் நடந்துகொள்வதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
69 வயதான ஃபட்டூ உலகில் தற்போது உயிர்வாழும் மிகவும் வயதான கொரில்லாவாக நம்பப்படுகிறது.
Summary
Happy 69th birthday to Fatou, the world’s oldest gorilla
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிக்க வேண்டும்: ஆளுநா் ஆர்லேகர்
பெண் வழக்குரைஞரை கத்தியால் குத்திய கணவா் கைது

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பிறந்தநாளைக் கொண்டாடிய சச்சின்!

கன்னாட் பிளோஸ் ஹோட்டல் கட்டடத்தில் இருந்து குதித்து இளம் வழக்குரைஞா் தற்கொலை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

