பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அமெரிக்காவுக்குச் செல்வதாக, பக்கிங்காம் அரண்மனை செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அன்று அறிவித்துள்ளது.
இந்தப் பயணமானது அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு வரும் ஏப். 27 முதல் ஏப். 30 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஈரான் மீதான போரில் அமெரிக்க போர் விமானங்கள் தங்களது விமானத் தளங்களைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை பகிரங்கமாக அதிபர் டிரம்ப் விமர்சித்து வருகிறார்.
இதையடுத்து, பிரிட்டன் குறித்து அதிபர் டிரம்ப்பின் விமர்சனங்களால் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் அமெரிக்க பயணத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஏராளமான உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
பிரிட்டனில் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் வேண்டுகோளை ஏற்று மன்னர் மற்றும் ராணி வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது வழக்கமாகவுள்ளது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் நாட்டுக்குச் சென்றிருந்தார். மேலும், டிரம்ப்பின் பிரிட்டன் பயணத்தில் அரசக்குடும்பத்தின் மரபுகளை அவர் வேண்டுமென்றே மீறியதாகக் கூறி கண்டனங்கள் எழுந்தன.
மேலும், மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வாழ்நாளில் இதுவரை 19 முறை அமெரிக்காவுக்குப் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
King Charles III of Britain is traveling to the United States on a state visit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி

பிடிவாதம் தளர வேண்டும்!

தந்தையைப் போல மகனுக்கும் புற்றுநோய்! கம்போடிய மன்னரின் நிலை என்ன?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


