உருளைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதில் அரைத்தேக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லிப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்தால் திடீர் வெங்காயச் சட்னி ரெடி.
தோசைமாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்கு சிறிது மிளகாய்வற்றல் காம்புகளைப் போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்துவிடும். தோசையும் சுவையாக இருக்கும்.
வறுத்த புழுங்கலரிசியை மாவாக்கி வைத்துக் கொண்டால், கூட்டுக் கறிகளை இறக்கி வைக்கும்போது லேசாகத் தூவி இறக்கினால் வாசனை கூடுதலாக இருக்கும்.
எள்ளை வாணலியில் வறுக்கும்போது, வெடித்து வெளியே சிதறாமல் இருக்க அவற்றை ஒரு சிறிய துணியில் பொட்டலம் மாதிரி கட்டி வாணலியில் போட்டு எள்ளை வறுக்க வேண்டும்.
மணக்கும் ஃபில்டர் காபி வேண்டுமா ஒரு துண்டு சாக்லெட் அல்லது வெண்ணிலா விதையை ஃபில்டரில் வைத்து காபி கலந்தால் காபி தன் மணத்துடன் சுவையாக இருக்கும்.
பூரி மொறு மொறுப்புடன் இருக்க, மாவைப் பிசைந்து தேய்த்தப்பிறகு, அதை ஒரு டப்பாவில் போட்டு அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிறகு எடுத்து பொரித்தால் பூரி க்ரிஸ்ப்பியாக இருப்பதுடன் எண்ணெய்யும் அதிகம் குடிக்காது.
மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், சாதம் மாவு போல் கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி மோர் கலந்து பாருங்கள். சாதம் புதியது போலாகிவிடும்.
இரண்டே மணி நேரத்தில் கெட்டித் தயிர் செய்ய ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுள்ள பாலை எடுத்துக் கலக்குங்கள். இதை அப்படியே ஹாட்பேக் வைத்து மூடி விடுங்கள். இரண்டே மணி நேரத்தில் சுவையான கெட்டித்தயிர் ரெடி.
கறிவேப்பிலை, புதினா இலைகளை உருவியதும், அதன் காம்புகளை தூக்கி எறியாதீர்கள், அவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து வறுத்த உளுந்தம் பருப்போடு சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். ரசம் மற்றும் காய்கறிகளில் இந்தப் பொடியைப் தூவிவிட்டால் சுவையும் மணமும் அசத்தலாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி - புகைப்படங்கள்

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் நடனமாடும் பாகுபலி பட நடிகை!
தவெகவுடன் இணைந்ததால் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்த கவுன்சிலர்!

மூன்று வெவ்வேறு அணிகளுக்காக 1000 ரன்கள்; கே.எல்.ராகுல் தனித்துவமான சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

