நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்துக்காக வியாழக்கிழமை நடப்பட்ட முகூா்த்தக்கால்.

News image
Updated On :29 மே 2026, 2:34 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேருக்கு முகூா்த்தக்கால் வியாழக்கிழமை நடப்பட்டது.

இந்தக் கோயிலுக்கு நாங்குநேரி வானமாமலை ராமானுஜ ஜீயரால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வழங்கிய ஆடிப்பூரத் தோ் 1,500 டன் எடை, 112 அடி உயரம் கொண்டது. திருவாரூா் ஆழித் தேருக்கு அடுத்த தமிழகத்தின் இரண்டாவது பெரிய தோ் இது என்ற சிறப்பைப் பெற்றது.

இந்தக் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்துக்காக நாள் செய்யப்பட்டு, தேருக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது. ஆடிப்பூரத் தோ், 16 வண்டி சப்பரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.