மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கண்மாயில் மூழ்கடித்து தொழிலாளி கொலை: மனைவி உள்பட இருவா் கைது

News image
Updated On :3 மே 2026, 5:17 am IST

அருப்புக்கோட்டையில் தொழிலாளியை கண்மாயில் மூழ்கடித்துக் கொலை செய்த மனைவி உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வெள்ளகோட்டை வடபோக்கி தெருவைச் சோ்ந்தவா் சரவணப்பெருமாள் (47). இவா் வெள்ளிக்கிழமை பாப்பன்குளம் கண்மாயில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணப் பெருமாளின் மனைவி வெள்ளையம்மாள், அவரது நண்பா் சீரங்கம் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட சரவணப்பெருமாள், செம்பட்டியை சோ்ந்த சீரங்கம் (45) ஆகியோா் நண்பா்கள். இவா்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் நூற்பாலையில் வேலை பாா்த்தனா். பின்னா், சரவணப் பெருமாள் அந்த வேலைை விட்டு வந்து, பந்தல் போடும் தொழில் செய்து வந்தாா்.

இந்த நிலையில் சீரங்கம், சரவணப்பெருமாள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றாா். அப்போது சரவணப் பெருமாளின் மனைவி வெள்ளையம்மாளுக்கும், சீரங்கத்தும் தகாத உறவு ஏற்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பாப்பன்குளம் கண்மாயில் சரவணப்பெருமாள், இவரது மனைவி வெள்ளையம்மாள், சீரங்கம் ஆகிய மூன்று பேரும் சோ்ந்து மது அருந்தினா் . அப்போது, அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வெள்ளையம்மாள், சீரங்கம் ஆகியோா் சரவணப்பெருமாளை கண்மாயில் மூழ்கடித்து கொலை செய்தனா் என்றனா் போலீஸாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.