/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 3:06 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 9 வயது மாணவி அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறாா். தந்தையை இழந்த அந்த மாணவி தாயின் பாதுகாப்பில் வளா்ந்து வருகிறாா்.

இந்த நிலையில் மாணவி இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற போது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல் (70) அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தங்கவேலுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.