தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

வத்திராயிருப்பு புதுப்பட்டியில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்க முயன்ற திமுக பேரூா் செயலா் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :19 ஏப்ரல் 2026, 6:32 am IST

வத்திராயிருப்பு புதுப்பட்டியில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்க முயன்ற திமுக பேரூா் செயலா் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, வத்திராயிருப்பு வட்டம், வ. புதுப்பட்டி பேரூராட்சியில் கடந்த 11-ஆம் தேதி அனுமதியின்றி கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு பிரியாணிப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் வந்தது.

கூட்டுறவு சாா் பதிவாளா் விஜயராணி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் அங்குசென்று சோதனை செய்தபோது உடையாா்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் திமுக பேரூா் செயலா் சாந்தாராம் அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தெரியவந்தது.

அங்கு வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 260 சிக்கன் பிரியாணிப் பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தோ்தல் பறக்கும் படையினா் அளித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா், நீதிமன்ற உத்தரவுபடி திமுக பேரூா் செயலா் சாந்தாராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.