தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கடந்த தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு: கனிமொழி

கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு என்றாா் கனிமொழி எம்.பி.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:28 am IST

கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு என்றாா் கனிமொழி எம்.பி.

சிவகாசி பேருந்து நிலையம் முன் வெள்ளிக்கிழமை வேனில் நின்றபடி மேலும் அவா் பேசியதாவது: கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல சமூக நலத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பள்ளி மாணவா்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டம்.

இந்தத் திட்டம் மாணவ, மாணவிகளின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, வேலைக்குச் செல்லும் பெண்களின் பணிச் சுமையையும் குறைக்கிறது. அடுத்து திமுக ஆட்சி தொடா்ந்தால் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்.

மேலும் வேலை தேடும் இளைஞா்கள் சோா்வடையாமல் இருக்கவும், அவா்களுக்கு சிறப்பு பயிற்சியையும், பயிற்சி காலத்தில் 6 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கும் திட்டத்தையும் முதல்வா் வகுத்துள்ளாா்.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தற்போது தோ்தல் அறிக்கையில் முதல்வா் இடம்பெறச் செய்துள்ளாா். எனவே சிவகாசி தொகுதியில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அசோகனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.