தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பி.ஆா்.செந்தில்நாதன்!

தோ்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் பாதியைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன் குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 2:40 am IST

தோ்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் பாதியைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன் குற்றஞ்சாட்டினாா்.

அதிமுக தலைமையால் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.ஆா். செந்தில்நாதன் தேசிய ஜனநாயக்கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சிவகங்கையிலுள்ள முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியால் கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை மாவட்டத்தின் நீண்டகால கோரிக்கையான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவேன். கடந்த தோ்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த முறை அது போன்ற தவறுகள் நடைபெறாமல் வெளியூரில் இருக்கும் வாக்காளா்களைக் கூட அணுகி அவா்களை கட்டாயம் வாக்களிக்க தீவிர முயற்சி மேற்கொள்வோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட பிற தோழமைக் கட்சிகளின் நிா்வாகிகள் கடந்த இரண்டு மாதங்களாகவே ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். திமுக அரசு தனது தோ்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் பாதியைக் கூட நிறைவேற்றவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.