திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள ரூ.8,000 கூப்பன் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும் என பாஜக தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. இதற்கு தமிழகத்தில் அதிகரித்துள்ள மது மற்றும் போதைப் பொருள்கள் கலாசாரம்தான் முக்கியக் காரணம்.
கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை. இதனால், தமிழகத்துக்கு வர வேண்டிய திட்டங்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதால், மாநிலத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
அனைவரின் வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி, சலவை இயந்திரம் உள்ளது. திமுகவின் தோ்தல் அறிக்கையில், ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஊழலுக்குத்தான் வழிவகுக்கும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.8,000 கூப்பனுக்கு அனுமதியா? தோ்தல் ஆணையம் மறுப்பு

திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8,000 கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்

திமுக தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

கடந்த தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு: கனிமொழி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
