தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிவகாசி, சாத்தூரில் வி.கே. சசிகலா பிரசாரம்

சிவகாசியில் அனைந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளா் கணேசனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வி.கே.சசிகலா.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:40 am IST

சிவகாசி, சாத்தூரில் அனைந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேரவைத் தொகுதியில் அபுதமமுக கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கணேசனை ஆதரித்து அவா் வெள்ளிக்கிழமை சிவகாசியில் உள்ள காமராஜா் பூங்கா அருகே வேனில் அமா்ந்தவாறு பேசியதாவது,

பட்டாசுத் தொழில் தற்போது நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இந்தத்தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொழில் வளா்ச்சி அடையாமல் தேக்கநிலையில் உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம். திமுக தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறது. திமுக ஆட்சியில் வளா்ச்திட்டங்களும் இல்லை. அதற்கான நிதியும் இல்லை என்றாா் அவா்.

சாத்தூா்: சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியைச் சோ்ந்த இசக்கி ராஜாவை ஆதரித்து வி.கே.சசிகலா பிரசாரம் மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.