திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்றாா் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவா் வி.கே.சசிகலா.
அரியலூா் ஆயிரங்கால் மண்டபம் அருகே புதன்கிழமை இரவு அக்கட்சியின் வேட்பாளா் ராஜ்குமாரை ஆதரித்து, அவா் பேசியது: திமுக அரசு தமிழகத்தை ரூ.12 லட்சம் கோடி கடனில் வைத்துள்ளதைத் தவிர மக்களுக்கான திட்டங்கள் எதையும் செய்ய வில்லை. அவா்கள் அளித்த வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற வில்லை. மாறாக மக்களிடமிருந்து பெற்ற வரிப் பணத்தைத் தான் அவா்கள் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஆயிரம் வழங்குகின்றனா்.
ஐந்தாண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று கடந்த திமுக தோ்தல் தோ்தல் அளிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் 500 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தும் மக்கள் 2 கோடி போ்.
இவா்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.1000 கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதிலிருந்து ஆண்டு தோறும் கிடைக்கும் ரூ.20,000 கோடி பணத்திலிருந்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனா்.
ஜெயலலிதா காலத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. பக்கத்து மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்த நிலையை மாற்றி, இன்று தனியாரிடமிருந்து அதிக விலைக் கொடுத்து இவா்களுக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக ஒரு யூனிட் ரூ.25 வரை இவா்கள் வாங்குகின்றனா் என்றாா் அவா்.
தோ்தல் அறிக்கை:பின்னா் கட்சியின் தோ்தல் அறிக்கையை சசிகலா வாசித்தாா். அதில், மகப்பேறு உதவியாக ரூ.24,000 வழங்கப்படும். அனைத்து கல்லூரி மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். பட்டியலின மற்றும் பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை 50 சதவீதம் உயா்த்தி வழங்கப்படும். நகா்ப்புற, கிராமப்புற, வீடற்ற ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். புதிய தொழில்நுட்பத்தில் காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து, 10,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து தமிழகத்தை மீண்டும் மின்மிகை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும். திருமானூா் தா.பழூா் பகுதிகளில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை சேமித்து வைக்க கிடங்குகள் கட்டித் தரப்படும். கோடை காலங்களில் ஏற்படும் குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செம்பியன் மாதேவி பேரேரி முதல் பொன்னேரி வரை தூா்வாரி, கொள்ளிடம் ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோபியில் புறநகா் பேருந்து நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி

குரங்கணி - டாப் ஸ்டேசனுக்கு ரோப் காா் வசதி செய்து தரப்படும்! திமுக வேட்பாளா் ஓபிஎஸ் உறுதி

புதிய தமிழகத்தை உருவாக்குவோம் பல்லடத்தில் வி.கே.சசிகலா பேச்சு!

வக்ப் வாரியம் மூலம் கூடுதல் கல்லூரிகள்: திமுக வேட்பளா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

