நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஓலமிட்டு அழுகின்றோம்: எம். ஜெயராமசர்மா

News image
Updated On :7 டிசம்பர் 2016, 4:38 pm IST
       ஜெயமென்னும் பெயர்கொண்டு        ஜெயித்துவந்த ஜெயாவம்மா       ஜெயாமுதல்வர் பதவியுடன்       ஜீவனையே கொடுத்துவிட்டார்       ஜெகமதனில் ஜெயிப்பதற்கு       ஜெயலலிதா ஆகிநின்றார்       ஜெயித்துவிட்டார் உள்ளமெலாம்       ஜெயாவம்மா வாழுகிறார் !        துணிவுகொண்ட பெண்ணானார்        துயர்பலவும் தான்கண்டார்        தனிமையிலே தவித்தாலும்        தமிழ்நாட்டை நினைத்துநின்றார்         அமுதான தமிழோடு        ஆங்கிலமும் பேசிநின்றார்        அதிமுகாவினது ஆணிவேராய்        அவர் இருந்தார் !        அஞ்சாமல் ஆட்சிசெய்த        அம்மாவைக் காண்பதெப்போ        அவருடைய துணிவான        அழகுதமிழ் கேட்பதெப்போ         புன்சிரிப்பு பூத்துநிற்கும்        பூமுகத்தைக காண்பதெப்போ         புகழ்பூத்த பெண்மணியே        உனைக்காணா அழுகின்றோம் !        ஆளுமைமிக்க அரசியல் தலைவியே        ஆரையும்துணிவுடன் அணுகியே நின்றனை        போரிடும்வல்லமை உறுதியாய் கொண்டனை         காலனைவென்றிடும்  வல்லமை இழந்ததேன் !           உன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா           உன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே           என்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய்           உன்னினிய குரல்கேளா ஓலமிட்டு அழுகின்றோம் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.