அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஏற்றம் கண்ட மின்சார வாகனப் பங்குகள்!

மின்வாகன நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

News image

மின்சார வாகனம்

Updated On :11 மே 2026, 10:33 pm IST

புதுதில்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியின் நடுவில், அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் பொருட்டு எரிபொருளைக் கவனத்துடன் பயன்படுத்துமாறும், மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, மின்வாகன நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில், ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் 6.02 சதவீதமும், ஜே.பி.எம். ஆட்டோ பங்குகள் 4.75 சதவீதமும், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பங்குகள் 2.47 சதவீதமும், ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்குகள் 2.16 சதவீதம் அதிகரித்தன.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலின் பாதகமான விளைவுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு முயன்று வருவதை வலியுறுத்திய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, எரிபொருளைக் கவனத்துடன் பயன்படுத்துமாறு ஞாயிற்றுக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், பிரெண்ட் கச்சா எண்ணெய், 3 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 104.4 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Shares of electric vehicle companies ended higher on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.