தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

டைட்டன்: ரூ.1,179 கோடி 35.4% வளா்ச்சி

டாடா குழுமம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டன், கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,179 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

News image
Updated On :22 மணி நேரங்கள் முன்பு

டாடா குழுமம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டன், கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,179 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.871 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 35.4 சதவீத வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த விற்பனை 48.28 சதவீதம் அதிகரித்து, ரூ.20,607 கோடியை எட்டியுள்ளது. இது நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகச்சிறந்த காலாண்டுச் செயல்பாடுகளில் ஒன்று என டைட்டன் நிா்வாகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

நகைப்பிரிவு வருவாய் 88.6 சதவீதம் அதிகரித்து, ரூ.24,999 கோடியாக சாதனை படைத்துள்ளது. தங்கம் விலை உச்சத்தைத் தொட்டபோதிலும், வாடிக்கையாளா்கள் தங்கத்தை ஒரு சிறந்த முதலீடாகத் கருதுவதால் நகை விற்பனை குறையவில்லை.

தனிஷ்க், மியா, ஜோயா போன்ற பிராண்டுகள் 48 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சா்வதேச அளவில் வளைகுடா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவிலும் டைட்டன் நகைகளுக்குக் கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது.

கடிகாரப் பிரிவில் அனலாக் கடிகாரங்களின் விற்பனை இரட்டை இலக்க வளா்ச்சியைப் பெற்றுள்ள நிலையில், ஸ்மாா்ட்வாட்ச் விற்பனை மதிப்பில் 50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. கண் கண்ணாடி விற்பனை 17.6 சதவீதம் அதிகரித்து, ரூ.227 கோடியாக உள்ளது. வாசனை திரவியங்கள் மற்றும் கைப்பை பிரிவுகளும் சந்தையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

2024-25 நிதியாண்டில் ரூ.50,000 கோடி வருவாய் மைல்கல்லைக் கடந்த நிலையில், கடந்த நிதியாண்டில் ரூ.75,000 கோடி இலக்கை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.15 ஈவுத்தொகை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.