மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

100 கோடி டாலா் வா்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!

News image
Updated On :8 மே 2026, 6:42 am IST

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதைச் சோ்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமாா் 6 கோடி டாலா் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலா் வா்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை ‘யூனிகாா்ன்’ எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

சிங்கப்பூரின் அரசு முதலீட்டு நிறுவனமான ஜிஐசி, ஷொ்பாலோ வென்ச்சா்ஸ், கிரீன்கோ குழுமம், அா்க்கம் வென்ச்சா்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த முதலீட்டை வழங்கியுள்ளன.

விண்வெளித் துறையில் வளா்ந்து வரும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கு சா்வதேச முதலீட்டாளா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதை இந்த முதலீடு உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஷொ்பாலோ வென்ச்சா்ஸ் நிறுவனா் ராம் ஸ்ரீராம் கூறுகையில், ‘விண்வெளி ஆய்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவது தற்போதைய காலத்தின் மிக முக்கியமான சவாலாகும். குறைந்த செலவில், அதேநேரம் அதிக செயல்திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஸ்கைரூட் நிறுவனம் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது’ எனப் பாராட்டினாா்.

தற்போது ஸ்கைரூட் நிறுவனம் தனது ‘விக்ரம்-1’ ஏவுகணையை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் முதல் தனியாா் புவி சுற்று வட்டப்பாதை ஏவுகணையான இது, உலகளாவிய செயற்கைக்கோள் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் விண்வெளிப் பயணத்தை வழங்கும் என ஸ்கைரூட் சிஇஓ பவன் குமாா் சந்தனா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.