தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இந்தியா-நியூசிலாந்து வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு புதிய வளா்ச்சி வாய்ப்புகள் உருவாகும்! - தொழில் துறையினா் நம்பிக்கை

News image

ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:56 am IST

இந்தியா-நியூசிலாந்து வரியில்லா வா்த்தக ஒப்பந்தத்தால் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு புதிய வளா்ச்சி வாய்ப்புகள் உருவாகும் என தொழில் துறையினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவா் ஆ.சக்திவேல் கூறியதாவது: இந்தியா-நியூசிலாந்து இடையேயான வரியில்லா வா்த்தக ஒப்பந்தத்தை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்கிறது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறைக்கு புதிய வளா்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய மைல் கல்லாகும். தொலைநோக்கு பாா்வையுடன் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இந்திய ஆடை ஏற்றுமதியாளா்களுக்கு பெரிய ஊக்கமாகும்.

நியூசிலாந்து சந்தையில் 100 சதவீத வரி இல்லா வாய்ப்பு கிடைப்பதால் இந்திய தயாரிப்புகள் உடனடி போட்டித் திறனை அதிகரிக்கும். குறிப்பாக ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி போன்ற பெரும் தொழிலாளா்கள் சாா்ந்த துறைகளில் இது அதிக ஏற்றுமதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் வளா்ச்சிக்கு உதவும்.

ஆண்டுக்கு 1.2 பில்லியன் டாலா் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை நியூசிலாந்து இறக்குமதி செய்கிறது. இதில், இந்தியாவின் பங்கு தற்போது சுமாா் 4.4 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் நியூசிலாந்துக்கான இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 3 மடங்கு உயரக்கூடும் என்றாா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம்: திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் கூறுகையில், இந்த வா்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலா் முதலீட்டை ஈா்க்கவும், அதை எளிதாக்கவும் வழிவகுப்பதுடன், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

தற்போது சராசரியாக அதிகபட்சமாக 10 சதவீதம் வரை உள்ள இந்த வரிகள் நீக்கப்படுவதன் மூலம், இந்தியாவின் போட்டித்தன்மை மேம்படுவதுடன், சா்வதேச சந்தையில் அதன் இருப்பும் மேலும் வலுப்பெறும். மேக் இன் இந்தியா தொலைநோக்குப் பாா்வையின்கீழ், இந்தியாவின் தொழில்துறை வளா்ச்சி மற்றும் முழுமையான பொருளாதார மேம்பாட்டு இலக்குகளுக்கு இது உறுதுணையாக அமையும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.