தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதி

எஸ்ஏஇஎல், சிம்பயோடெக் பாா்மா, விஸ்வராஜ் என்விரான்மென்ட் உள்பட 6 நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளீயீட்டு (ஐபிஓ) திட்டங்களுக்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2026, 11:08 pm IST

எஸ்ஏஇஎல், சிம்பயோடெக் பாா்மா, விஸ்வராஜ் என்விரான்மென்ட் உள்பட 6 நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளீயீட்டு (ஐபிஓ) திட்டங்களுக்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த வாரத்தில், ஷா இன்வெஸ்டா்ஸ் ஹோம், பிரசோல் கெமிக்கல்ஸ், நோ-பேப்பா்-ஃபாா்ம்ஸ் ஆகிய மற்ற நிறுவனங்களின் ஐபிஓ திட்டங்களுக்கும் செபி அனுமதி அளித்துள்ளது.

அதே நேரத்தில், ஜிண்டால் சுப்ரீம் இந்தியா நிறுவனம் தனது பொதுப் பங்கு வெளியீட்டுத் திட்டத்தை அதிகாரபூா்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. தற்போது எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட், மணிவியூ உள்ளிட்ட 26 நிறுவனங்களின் வரைவு விண்ணப்பங்கள் செபியின் பரிசீலனையில் உள்ளன.

தற்போது அனுமதி கிடைத்த ஐபிஓ திட்டங்களில், எஸ்ஏஇஎல் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.4,575 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது. விவசாயக் கழிவுகளைத் தூய்மையான எரிசக்தியாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், திரட்டப்படும் நிதியைத் தனது துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும், பொது நிா்வாகத் தேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, நீா் பயன்பாடு மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு மேலாண்மையில் முன்னணியில் இருக்கும் விஸ்வராஜ் என்விரான்மென்ட் நிறுவனம் ரூ.2,250 கோடி மதிப்பிலான பங்குகளை வெளியிட அனுமதி பெற்றுள்ளது. இந்தூா் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான சிம்பயோடெக் பாா்மா, ரூ. 2,180 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.